மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை வழங்காமல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அல்வாதான் கொடுப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை : மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை வழங்காமல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அல்வாதான் கொடுப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கோவை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பேசுகையில், ''தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப் படம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தெரிவித்துள்ள கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும். இது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க தான் விரும்பவில்லை. மேலும், இவ்விவகாரத்தில் கட்சியின் கருத்தே எனது கருத்து.
மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசிடம் கோரினால், புதுச்சேரிக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. இருப்பினும், புதுச்சேரியில் முறையான நலத்திட்டங்களை மேற்கொண்டு வரப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் நிதி கோரினால் எங்களுக்கு நிதி கொடுக்காமல் பிரதமர் மோடி அல்வாதான் கொடுக்கிறது. வேலையின்மை தொடர்பாக கேள்வி எழுப்பினால், பாரத பிரதமர் பக்கோடா விற்கச் சொல்வது நியாயமா..?.'' என்றார்.
வரும் 24 ஆம் தேதி புதுச்சேரிக்கு பிரதமர் வருகை புரியவுள்ளதாக கூறிய முதலமைச்சர் நாராயணசாமி துணைநிலை ஆளுநரிடம் சுமூகமான உறவையே மேற்கொள்ள தங்கள் கட்சி நினைப்பதாகக் கூறினார். பின்னர் சாலை மார்க்கமாக ஈஷா யோக மையத்திற்கு சென்றார்.
ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கோவை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பேசுகையில், ''தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப் படம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தெரிவித்துள்ள கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும். இது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க தான் விரும்பவில்லை. மேலும், இவ்விவகாரத்தில் கட்சியின் கருத்தே எனது கருத்து.
மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசிடம் கோரினால், புதுச்சேரிக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. இருப்பினும், புதுச்சேரியில் முறையான நலத்திட்டங்களை மேற்கொண்டு வரப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் நிதி கோரினால் எங்களுக்கு நிதி கொடுக்காமல் பிரதமர் மோடி அல்வாதான் கொடுக்கிறது. வேலையின்மை தொடர்பாக கேள்வி எழுப்பினால், பாரத பிரதமர் பக்கோடா விற்கச் சொல்வது நியாயமா..?.'' என்றார்.
வரும் 24 ஆம் தேதி புதுச்சேரிக்கு பிரதமர் வருகை புரியவுள்ளதாக கூறிய முதலமைச்சர் நாராயணசாமி துணைநிலை ஆளுநரிடம் சுமூகமான உறவையே மேற்கொள்ள தங்கள் கட்சி நினைப்பதாகக் கூறினார். பின்னர் சாலை மார்க்கமாக ஈஷா யோக மையத்திற்கு சென்றார்.