''மாநிலங்களுக்கு நிதி வழங்காமல், மத்திய அரசு அல்வா கொடுக்கிறது''

மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை வழங்காமல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அல்வாதான் கொடுப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை : மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை வழங்காமல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அல்வாதான் கொடுப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  

ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கோவை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பேசுகையில், ''தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப் படம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தெரிவித்துள்ள கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும். இது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க தான் விரும்பவில்லை. மேலும், இவ்விவகாரத்தில் கட்சியின் கருத்தே எனது கருத்து. 

மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசிடம் கோரினால், புதுச்சேரிக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. இருப்பினும், புதுச்சேரியில் முறையான நலத்திட்டங்களை மேற்கொண்டு வரப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் நிதி கோரினால் எங்களுக்கு நிதி கொடுக்காமல் பிரதமர் மோடி அல்வாதான் கொடுக்கிறது. வேலையின்மை தொடர்பாக கேள்வி எழுப்பினால், பாரத பிரதமர் பக்கோடா விற்கச் சொல்வது நியாயமா..?.'' என்றார்.  

வரும் 24 ஆம் தேதி புதுச்சேரிக்கு பிரதமர் வருகை புரியவுள்ளதாக கூறிய முதலமைச்சர் நாராயணசாமி துணைநிலை ஆளுநரிடம் சுமூகமான உறவையே மேற்கொள்ள தங்கள் கட்சி நினைப்பதாகக் கூறினார். பின்னர் சாலை மார்க்கமாக ஈஷா யோக மையத்திற்கு சென்றார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...