''மாநிலங்களுக்கு நிதி வழங்காமல், மத்திய அரசு அல்வா கொடுக்கிறது''

மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை வழங்காமல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அல்வாதான் கொடுப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை : மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை வழங்காமல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அல்வாதான் கொடுப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  

ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கோவை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பேசுகையில், ''தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப் படம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தெரிவித்துள்ள கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும். இது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க தான் விரும்பவில்லை. மேலும், இவ்விவகாரத்தில் கட்சியின் கருத்தே எனது கருத்து. 

மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசிடம் கோரினால், புதுச்சேரிக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. இருப்பினும், புதுச்சேரியில் முறையான நலத்திட்டங்களை மேற்கொண்டு வரப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் நிதி கோரினால் எங்களுக்கு நிதி கொடுக்காமல் பிரதமர் மோடி அல்வாதான் கொடுக்கிறது. வேலையின்மை தொடர்பாக கேள்வி எழுப்பினால், பாரத பிரதமர் பக்கோடா விற்கச் சொல்வது நியாயமா..?.'' என்றார்.  

வரும் 24 ஆம் தேதி புதுச்சேரிக்கு பிரதமர் வருகை புரியவுள்ளதாக கூறிய முதலமைச்சர் நாராயணசாமி துணைநிலை ஆளுநரிடம் சுமூகமான உறவையே மேற்கொள்ள தங்கள் கட்சி நினைப்பதாகக் கூறினார். பின்னர் சாலை மார்க்கமாக ஈஷா யோக மையத்திற்கு சென்றார்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...