பல்லடம் 29-வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருப்பூர் : பல்லடம் 29-வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பல்லடம் வட்டார போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்லடம் பேருந்து நிலையம் அருகே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தப்பட்டன. இதனைப் பல்லடம் டி.எஸ்.பி முத்துச்சாமி துவக்கி வைத்தார். சாலையில் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் பல்லடம் போக்குவரத்து ஆய்வாளர் திருநாவுக்கரசு, போக்குவரத்து துறை அதிகாரிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


பல்லடம் வட்டார போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்லடம் பேருந்து நிலையம் அருகே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தப்பட்டன. இதனைப் பல்லடம் டி.எஸ்.பி முத்துச்சாமி துவக்கி வைத்தார். சாலையில் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் பல்லடம் போக்குவரத்து ஆய்வாளர் திருநாவுக்கரசு, போக்குவரத்து துறை அதிகாரிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
