காதலர் தினத்தை கேக் வெட்டிக் கொண்டாடிய கலப்புத்திருமணம் செய்த தம்பதிகள்

உலகம் முழுவதும் நாளை (பிப்.,14) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தில் கலப்பு திருமணம் செய்தவர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

கோவை : உலகம் முழுவதும் நாளை (பிப்.,14) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தில் கலப்பு திருமணம் செய்தவர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர். 

காந்திபுரத்திலுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில், கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் 18-ஆம் ஆண்டாக காதலர் தினத்தை கேக் வெட்டி குழந்தைகள் மற்றும் நண்பர்களோடு கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில், காதலர் தினம் உலகம் முழுவதும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் தான் சாதிய எண்ணம் கொண்ட மதவாதிகள் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள். இதற்கு, சாதிய கட்டுமானங்கள், காதல் திருமணங்களால் தகர்ந்துவிடும் என்ற அச்சம்தான் காரணம். மேலும், இன்றைக்கு பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆணவக்கொலைக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்ற வேண்டும் என்று நீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. சாதி, மத மறுப்பு செய்துகொண்டவர்களுக்கு எனத் தனி ஆணையம் அமைத்து, அவர்களது குழந்தைகளுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...