உலகம் முழுவதும் நாளை (பிப்.,14) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தில் கலப்பு திருமணம் செய்தவர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர்.
கோவை : உலகம் முழுவதும் நாளை (பிப்.,14) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தில் கலப்பு திருமணம் செய்தவர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர்.
காந்திபுரத்திலுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில், கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் 18-ஆம் ஆண்டாக காதலர் தினத்தை கேக் வெட்டி குழந்தைகள் மற்றும் நண்பர்களோடு கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில், காதலர் தினம் உலகம் முழுவதும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் தான் சாதிய எண்ணம் கொண்ட மதவாதிகள் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள். இதற்கு, சாதிய கட்டுமானங்கள், காதல் திருமணங்களால் தகர்ந்துவிடும் என்ற அச்சம்தான் காரணம். மேலும், இன்றைக்கு பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆணவக்கொலைக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்ற வேண்டும் என்று நீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. சாதி, மத மறுப்பு செய்துகொண்டவர்களுக்கு எனத் தனி ஆணையம் அமைத்து, அவர்களது குழந்தைகளுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
காந்திபுரத்திலுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில், கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் 18-ஆம் ஆண்டாக காதலர் தினத்தை கேக் வெட்டி குழந்தைகள் மற்றும் நண்பர்களோடு கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில், காதலர் தினம் உலகம் முழுவதும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் தான் சாதிய எண்ணம் கொண்ட மதவாதிகள் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள். இதற்கு, சாதிய கட்டுமானங்கள், காதல் திருமணங்களால் தகர்ந்துவிடும் என்ற அச்சம்தான் காரணம். மேலும், இன்றைக்கு பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆணவக்கொலைக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்ற வேண்டும் என்று நீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. சாதி, மத மறுப்பு செய்துகொண்டவர்களுக்கு எனத் தனி ஆணையம் அமைத்து, அவர்களது குழந்தைகளுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.