காதலர் தினத்தை கேக் வெட்டிக் கொண்டாடிய கலப்புத்திருமணம் செய்த தம்பதிகள்

உலகம் முழுவதும் நாளை (பிப்.,14) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தில் கலப்பு திருமணம் செய்தவர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

கோவை : உலகம் முழுவதும் நாளை (பிப்.,14) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தில் கலப்பு திருமணம் செய்தவர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர். 

காந்திபுரத்திலுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில், கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் 18-ஆம் ஆண்டாக காதலர் தினத்தை கேக் வெட்டி குழந்தைகள் மற்றும் நண்பர்களோடு கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில், காதலர் தினம் உலகம் முழுவதும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் தான் சாதிய எண்ணம் கொண்ட மதவாதிகள் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள். இதற்கு, சாதிய கட்டுமானங்கள், காதல் திருமணங்களால் தகர்ந்துவிடும் என்ற அச்சம்தான் காரணம். மேலும், இன்றைக்கு பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆணவக்கொலைக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்ற வேண்டும் என்று நீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. சாதி, மத மறுப்பு செய்துகொண்டவர்களுக்கு எனத் தனி ஆணையம் அமைத்து, அவர்களது குழந்தைகளுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...