ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை ரூ.35-ஆக நிர்ணயிக்க வேண்டும் -விவசாயிகள் சங்கம்

ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை ரூ.35-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்றும், விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை ரூ.35-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்றும், விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது தொடர்பாக தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், " கோவை மாவட்ட விவசாயிகள் பலர் கால்நடைகளை வளர்த்து பால் கறந்து கூட்டுறவு சங்கங்கள் மூலமும் தனியார் பால் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால் தீவனங்கள் கிடைக்க பெறுவதில் சிக்கல் உள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள் 1 லிட்டர் பால் கொள்முதல் விலை ரூ.20-லிருந்து ரூ.22 வரையும் தனியார் பால் வியாபாரிகள் ரூ.23-லிருந்து ரூ.25 வரையும் கொடுக்கின்றனர்.

சராசரியாக 1 லிட்டர் பாலின் உற்பத்திக்கு ரூ.20 ஆகும் நிலையில் ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் முன்னேறவில்லை. மேலும் கொள்முதல் செய்யும் பாலின் விலையை ரூ.35-ஆக நிர்ணயிக்க வேண்டும்." என்றார். 



மற்றொரு மனுவில் விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கக்கூடாது என்றும், அவ்வாறு விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கும் பட்சத்தில் விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டும் என்றும் தென்னை மரங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் உயர் மின் கோபுரங்கள் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...