ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை ரூ.35-ஆக நிர்ணயிக்க வேண்டும் -விவசாயிகள் சங்கம்

ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை ரூ.35-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்றும், விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை ரூ.35-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்றும், விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது தொடர்பாக தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், " கோவை மாவட்ட விவசாயிகள் பலர் கால்நடைகளை வளர்த்து பால் கறந்து கூட்டுறவு சங்கங்கள் மூலமும் தனியார் பால் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால் தீவனங்கள் கிடைக்க பெறுவதில் சிக்கல் உள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள் 1 லிட்டர் பால் கொள்முதல் விலை ரூ.20-லிருந்து ரூ.22 வரையும் தனியார் பால் வியாபாரிகள் ரூ.23-லிருந்து ரூ.25 வரையும் கொடுக்கின்றனர்.

சராசரியாக 1 லிட்டர் பாலின் உற்பத்திக்கு ரூ.20 ஆகும் நிலையில் ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் முன்னேறவில்லை. மேலும் கொள்முதல் செய்யும் பாலின் விலையை ரூ.35-ஆக நிர்ணயிக்க வேண்டும்." என்றார். 



மற்றொரு மனுவில் விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கக்கூடாது என்றும், அவ்வாறு விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கும் பட்சத்தில் விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டும் என்றும் தென்னை மரங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் உயர் மின் கோபுரங்கள் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...