வால்பாறை பகுதியில் கரடி தாக்கியதில் மன நிலை பாதிக்கப்பட்டவர் பரிதாபமாகப் பலியானார்.
கோவை: வால்பாறை பகுதியில் கரடி தாக்கியதில் மன நிலை பாதிக்கப்பட்டவர் பரிதாபமாகப் பலியானார்.
வாட்டர்பால் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் சூசை. மனநிலை பாதிக்கப்பட்ட இவர் தனது சகோதரர் இருதயராஜூடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை 6 மணி முதல் சூசை மாயமானார். இருதயராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து பல்வேறு இடங்களில் அவரை தேடினர். அப்போது நேற்று இரவு 9.30 மணிக்கு வாட்டர்பால் எஸ்டேட் ஆண்டிவீரன் வனப்பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

இது தொடர்பாக வால்பாறை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனச்சரகர் சக்திவேல், வால்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணி, காவல்துறை ஆய்வாளர் திருமேனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நள்ளிரவு 1 மணிக்கு உடலைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அப்போது, சூசை கரடி தாக்கி இறந்தது தெரியவந்தது. உயிரிழந்த சூசை தனது தாயாரின் கல்லறைக்கு சென்றபோது இச்சம்பவம் நடந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். சூசையின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கரடி தாக்கி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
வாட்டர்பால் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் சூசை. மனநிலை பாதிக்கப்பட்ட இவர் தனது சகோதரர் இருதயராஜூடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை 6 மணி முதல் சூசை மாயமானார். இருதயராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து பல்வேறு இடங்களில் அவரை தேடினர். அப்போது நேற்று இரவு 9.30 மணிக்கு வாட்டர்பால் எஸ்டேட் ஆண்டிவீரன் வனப்பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

இது தொடர்பாக வால்பாறை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனச்சரகர் சக்திவேல், வால்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணி, காவல்துறை ஆய்வாளர் திருமேனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நள்ளிரவு 1 மணிக்கு உடலைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அப்போது, சூசை கரடி தாக்கி இறந்தது தெரியவந்தது. உயிரிழந்த சூசை தனது தாயாரின் கல்லறைக்கு சென்றபோது இச்சம்பவம் நடந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். சூசையின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கரடி தாக்கி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.