வால்பாறை பகுதியில் கரடி தாக்கியதில் ஒருவர் பலி: பொதுமக்கள் அச்சம்

வால்பாறை பகுதியில் கரடி தாக்கியதில் மன நிலை பாதிக்கப்பட்டவர் பரிதாபமாகப் பலியானார்.

கோவை: வால்பாறை பகுதியில் கரடி தாக்கியதில் மன நிலை பாதிக்கப்பட்டவர் பரிதாபமாகப் பலியானார். 

வாட்டர்பால் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் சூசை. மனநிலை பாதிக்கப்பட்ட இவர் தனது சகோதரர் இருதயராஜூடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை 6 மணி முதல் சூசை மாயமானார். இருதயராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து பல்வேறு இடங்களில் அவரை தேடினர். அப்போது நேற்று இரவு 9.30 மணிக்கு வாட்டர்பால் எஸ்டேட் ஆண்டிவீரன் வனப்பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.



இது தொடர்பாக வால்பாறை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனச்சரகர் சக்திவேல், வால்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணி, காவல்துறை ஆய்வாளர் திருமேனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நள்ளிரவு 1 மணிக்கு உடலைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.



அப்போது, சூசை கரடி தாக்கி இறந்தது தெரியவந்தது. உயிரிழந்த சூசை தனது தாயாரின் கல்லறைக்கு சென்றபோது இச்சம்பவம் நடந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். சூசையின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கரடி தாக்கி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது. 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...