வால்பாறை பகுதியில் கரடி தாக்கியதில் ஒருவர் பலி: பொதுமக்கள் அச்சம்

வால்பாறை பகுதியில் கரடி தாக்கியதில் மன நிலை பாதிக்கப்பட்டவர் பரிதாபமாகப் பலியானார்.

கோவை: வால்பாறை பகுதியில் கரடி தாக்கியதில் மன நிலை பாதிக்கப்பட்டவர் பரிதாபமாகப் பலியானார். 

வாட்டர்பால் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் சூசை. மனநிலை பாதிக்கப்பட்ட இவர் தனது சகோதரர் இருதயராஜூடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை 6 மணி முதல் சூசை மாயமானார். இருதயராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து பல்வேறு இடங்களில் அவரை தேடினர். அப்போது நேற்று இரவு 9.30 மணிக்கு வாட்டர்பால் எஸ்டேட் ஆண்டிவீரன் வனப்பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.



இது தொடர்பாக வால்பாறை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனச்சரகர் சக்திவேல், வால்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணி, காவல்துறை ஆய்வாளர் திருமேனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நள்ளிரவு 1 மணிக்கு உடலைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.



அப்போது, சூசை கரடி தாக்கி இறந்தது தெரியவந்தது. உயிரிழந்த சூசை தனது தாயாரின் கல்லறைக்கு சென்றபோது இச்சம்பவம் நடந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். சூசையின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கரடி தாக்கி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது. 

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...