சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி திருப்பூரில் கைது

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி நொண்டி முருகன் திருப்பூரில் சென்னை தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.



திருப்பூர்: சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி நொண்டி முருகன் திருப்பூரில் சென்னை தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

சென்னை அபிராமபுரத்தை சேர்ந்தவர் நொண்டி முருகன் (எ) முருகன். அபிராமபுரம் காவல் நிலையத்தில் இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த வழக்குகளுக்காகச் சிறை சென்றும் வந்துள்ளார். இந்நிலையில், வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ளார். இதனால் அபிராம்புரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவரைத் தேடி வந்தனர். 

இந்த நிலையில், திருப்பூர் முருகம்பாளையம் பகுதியிலுள்ள அவரது மகன் மணிகண்டன் வீட்டில் முருகன் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்த போலீசார் நேற்று அவரைக் கைது செய்து சென்னை அழைத்துச் சென்றனர். 

இந்நிலையில் முருகனின் மனைவி செல்வி, போலீசார் பொய் வழக்கு போட்டு தனது கணவரை அழைத்துச் சென்றுள்ளதாகவும், தங்கள் வாழ்க்கை நிலைகுலைந்து உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.



Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...