சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி நொண்டி முருகன் திருப்பூரில் சென்னை தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர்: சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி நொண்டி முருகன் திருப்பூரில் சென்னை தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை அபிராமபுரத்தை சேர்ந்தவர் நொண்டி முருகன் (எ) முருகன். அபிராமபுரம் காவல் நிலையத்தில் இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த வழக்குகளுக்காகச் சிறை சென்றும் வந்துள்ளார். இந்நிலையில், வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ளார். இதனால் அபிராம்புரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவரைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், திருப்பூர் முருகம்பாளையம் பகுதியிலுள்ள அவரது மகன் மணிகண்டன் வீட்டில் முருகன் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்த போலீசார் நேற்று அவரைக் கைது செய்து சென்னை அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் முருகனின் மனைவி செல்வி, போலீசார் பொய் வழக்கு போட்டு தனது கணவரை அழைத்துச் சென்றுள்ளதாகவும், தங்கள் வாழ்க்கை நிலைகுலைந்து உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
