திருப்பூரில் தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்து விபத்து: பெண்கள் இருவர் படுகாயம்

பல்லடம் பகுதியில் தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்த விபத்தில் சாலையில் நடந்து சென்ற இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தாறுமாறாக ஓடிய கார் குப்புற கவிழ்ந்து விபத்து! சாலையில் நடந்து சென்ற சகோதரிகள் இருவர் படுகாயம்!! குடிபோதையில் காரை ஓட்டிய நபரை பிடித்து போலீசார் விசாரணை.திருப்பூர்: பல்லடம் பகுதியில் தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்த விபத்தில் சாலையில் நடந்து சென்ற இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த உடுமலை சாலையில் கேத்தனூரை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் சிற்றம்பலம் அருகே தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறி அடித்து ஓடினர்.

இதனிடையே, சாலோயோரம் நடந்து சென்ற ஹேமலதா மற்றும் அவரது சகோதரி ரேணுகா தேவி ஆகியோர் மீது கார் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்த இருவரையும் மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலேன்ஸ் மூலமாக பல்லடம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு அனுப்பி வைத்தனர். அன்கு முதலுதவிக்குப் பிறகு அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.



இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கார் ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கவுண்டம்பாளயத்தில் தண்ணீர் லாரி வைத்து வியாபாரம் செய்து வரும் முத்துச்சாமி என்பதும், காரை குடிபோதையில் தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்தது. 

தொடர்ந்து, கார் ஓட்டுநர் முத்துச்சாமியை பல்லடம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.



Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...