பல்லடம் பகுதியில் தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்த விபத்தில் சாலையில் நடந்து சென்ற இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தாறுமாறாக ஓடிய கார் குப்புற கவிழ்ந்து விபத்து! சாலையில் நடந்து சென்ற சகோதரிகள் இருவர் படுகாயம்!! குடிபோதையில் காரை ஓட்டிய நபரை பிடித்து போலீசார் விசாரணை.திருப்பூர்: பல்லடம் பகுதியில் தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்த விபத்தில் சாலையில் நடந்து சென்ற இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த உடுமலை சாலையில் கேத்தனூரை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் சிற்றம்பலம் அருகே தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறி அடித்து ஓடினர்.
இதனிடையே, சாலோயோரம் நடந்து சென்ற ஹேமலதா மற்றும் அவரது சகோதரி ரேணுகா தேவி ஆகியோர் மீது கார் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
படுகாயமடைந்த இருவரையும் மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலேன்ஸ் மூலமாக பல்லடம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு அனுப்பி வைத்தனர். அன்கு முதலுதவிக்குப் பிறகு அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கார் ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கவுண்டம்பாளயத்தில் தண்ணீர் லாரி வைத்து வியாபாரம் செய்து வரும் முத்துச்சாமி என்பதும், காரை குடிபோதையில் தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்தது.
தொடர்ந்து, கார் ஓட்டுநர் முத்துச்சாமியை பல்லடம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
