திருப்பூரில் தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்து விபத்து: பெண்கள் இருவர் படுகாயம்

பல்லடம் பகுதியில் தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்த விபத்தில் சாலையில் நடந்து சென்ற இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தாறுமாறாக ஓடிய கார் குப்புற கவிழ்ந்து விபத்து! சாலையில் நடந்து சென்ற சகோதரிகள் இருவர் படுகாயம்!! குடிபோதையில் காரை ஓட்டிய நபரை பிடித்து போலீசார் விசாரணை.திருப்பூர்: பல்லடம் பகுதியில் தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்த விபத்தில் சாலையில் நடந்து சென்ற இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த உடுமலை சாலையில் கேத்தனூரை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் சிற்றம்பலம் அருகே தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறி அடித்து ஓடினர்.

இதனிடையே, சாலோயோரம் நடந்து சென்ற ஹேமலதா மற்றும் அவரது சகோதரி ரேணுகா தேவி ஆகியோர் மீது கார் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்த இருவரையும் மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலேன்ஸ் மூலமாக பல்லடம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு அனுப்பி வைத்தனர். அன்கு முதலுதவிக்குப் பிறகு அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.



இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கார் ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கவுண்டம்பாளயத்தில் தண்ணீர் லாரி வைத்து வியாபாரம் செய்து வரும் முத்துச்சாமி என்பதும், காரை குடிபோதையில் தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்தது. 

தொடர்ந்து, கார் ஓட்டுநர் முத்துச்சாமியை பல்லடம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.



Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...