பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அனைவரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.
திருப்பூர்: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அனைவரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.
திருப்பூரில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய ஜி.எஸ்.டி குழு உறுப்பினரும் , கேரள நிதியமைச்சருமான தாமஸ் ஐசக் திருப்பூர் வந்துள்ளார். இதனையொட்டி திருப்பூரில் தொழில் துறையினருடனான கலந்துரையாடல் கூட்டம் ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தாமஸ் ஐசக் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "திருப்பூர் போன்றே சூரத், லூதியானா போன்ற பின்னலாடை நகரங்களும் பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி-யால் அதிகளவில் பாதிக்கப்பட்டன.
பாதிப்படைந்த அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். விரைவில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள தாராள பொருளாதார கொள்கையால் வெளிநாட்டினர் எளிதாக இந்தியாவில் தொழில்துவங்க வசதியாகும். அதனை இந்திய தொழில் நிறுவனங்கள் இணைந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொழில் துறையினர் ஜி,எஸ்.டி வரிவிதிப்பில் பின்னலாடைத் துறையினருக்கான சலுகைகளைப் பரிந்துரைக்க வேண்டும்." என்றனர்.

திருப்பூரில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய ஜி.எஸ்.டி குழு உறுப்பினரும் , கேரள நிதியமைச்சருமான தாமஸ் ஐசக் திருப்பூர் வந்துள்ளார். இதனையொட்டி திருப்பூரில் தொழில் துறையினருடனான கலந்துரையாடல் கூட்டம் ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தாமஸ் ஐசக் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "திருப்பூர் போன்றே சூரத், லூதியானா போன்ற பின்னலாடை நகரங்களும் பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி-யால் அதிகளவில் பாதிக்கப்பட்டன.
பாதிப்படைந்த அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். விரைவில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள தாராள பொருளாதார கொள்கையால் வெளிநாட்டினர் எளிதாக இந்தியாவில் தொழில்துவங்க வசதியாகும். அதனை இந்திய தொழில் நிறுவனங்கள் இணைந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொழில் துறையினர் ஜி,எஸ்.டி வரிவிதிப்பில் பின்னலாடைத் துறையினருக்கான சலுகைகளைப் பரிந்துரைக்க வேண்டும்." என்றனர்.
