பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அனைவரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - கேரளா நிதியமைச்சர்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அனைவரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.

திருப்பூர்: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அனைவரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.

திருப்பூரில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய ஜி.எஸ்.டி குழு உறுப்பினரும் , கேரள நிதியமைச்சருமான தாமஸ் ஐசக் திருப்பூர் வந்துள்ளார். இதனையொட்டி திருப்பூரில் தொழில் துறையினருடனான கலந்துரையாடல் கூட்டம் ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட தாமஸ் ஐசக் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "திருப்பூர் போன்றே சூரத், லூதியானா போன்ற பின்னலாடை நகரங்களும் பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி-யால் அதிகளவில் பாதிக்கப்பட்டன. 

பாதிப்படைந்த அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். விரைவில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள தாராள பொருளாதார கொள்கையால் வெளிநாட்டினர் எளிதாக இந்தியாவில் தொழில்துவங்க வசதியாகும். அதனை இந்திய தொழில் நிறுவனங்கள் இணைந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொழில் துறையினர் ஜி,எஸ்.டி வரிவிதிப்பில் பின்னலாடைத் துறையினருக்கான சலுகைகளைப் பரிந்துரைக்க வேண்டும்." என்றனர்.



Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...