கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன் 3 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Electrician, Fitter, MMV, Wireman, Welder உள்ளிட்ட தொழிற்பிரிவுகளில் இலவசப் பயிற்சியுடன் மாதம் ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படும்.


Coimbatore: கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வி ஆண்டுக்கான பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 3, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் Electrician, Fitter, MMV, Wireman (இரண்டு ஆண்டு பயிற்சி காலம்) மற்றும் Welder (ஓராண்டு பயிற்சி காலம்) ஆகிய தொழிற்பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.




இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அசல் சான்றிதழ்கள் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து சேர்க்கை உதவி மையத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.




Wireman மற்றும் Welder தொழிற்பிரிவுகளுக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும், Electrician, Fitter, MMV தொழிற்பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியும் அவசியம். ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 14 வயது முதல் 40 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண் விண்ணப்பதாரர்களுக்கு 14 வயது முதல் உச்ச வயது வரம்பு இல்லை.




பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம். அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படும். இதனுடன் வருகையின் அடிப்படையில் ரூ.750 கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும்.




விலையில்லா NIMI பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், வரைபடக் கருவிகள் மற்றும் மிதிவண்டி வழங்கப்படும். தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் முன்னணி நிறுவனங்களில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு பெற்று வழங்கப்படும்.




மேலும், பயிற்சியாளர்களுக்கு இட வசதி பொறுத்து உணவு மற்றும் தங்கும் விடுதி இலவசமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.


Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...