திருப்பூர் மாவட்ட காவல் துறையினரின் குடும்பத்தினருக்கான இலவச பொது மருத்துவ முகாமை அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உமா இன்று தொடங்கி வைத்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் துறையினரின் குடும்பத்தினருக்கான இலவச பொது மருத்துவ முகாமை அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உமா இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் உட்கோட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான இலவச பொது மருத்துவ முகாமை திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் உமா தொடங்கி வைத்தார். பல்லடம் ரோட்டரி பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில் துணை காவல் கண்காணிப்பாளர் முத்துச்சாமி கலந்து கொண்டார்.
மேலும், பல்லடம், மங்கலம், அவினாசிபாளையம், மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட 7 காவல் நிலையங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முகாமில் கலந்து கொண்டவர்களுக்குப் பொன்னி மற்றும் ராஜேஷ்வரி ஆகிய மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் உடல்திறன், கண்பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவுப் பரிசோதனை, எலும்பு பரிசோதனை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளை நடத்தி ஆலோசனை வழங்கினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் உட்கோட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான இலவச பொது மருத்துவ முகாமை திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் உமா தொடங்கி வைத்தார். பல்லடம் ரோட்டரி பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில் துணை காவல் கண்காணிப்பாளர் முத்துச்சாமி கலந்து கொண்டார்.
மேலும், பல்லடம், மங்கலம், அவினாசிபாளையம், மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட 7 காவல் நிலையங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முகாமில் கலந்து கொண்டவர்களுக்குப் பொன்னி மற்றும் ராஜேஷ்வரி ஆகிய மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் உடல்திறன், கண்பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவுப் பரிசோதனை, எலும்பு பரிசோதனை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளை நடத்தி ஆலோசனை வழங்கினர்.