திருப்பூர் மாவட்ட காவல் துறையினரின் குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ முகாம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்

திருப்பூர் மாவட்ட காவல் துறையினரின் குடும்பத்தினருக்கான இலவச பொது மருத்துவ முகாமை அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உமா இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் துறையினரின் குடும்பத்தினருக்கான இலவச பொது மருத்துவ முகாமை அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உமா இன்று தொடங்கி வைத்தார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் உட்கோட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான இலவச பொது மருத்துவ முகாமை திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் உமா தொடங்கி வைத்தார். பல்லடம் ரோட்டரி பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில் துணை காவல் கண்காணிப்பாளர் முத்துச்சாமி கலந்து கொண்டார். 

மேலும், பல்லடம், மங்கலம், அவினாசிபாளையம், மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட 7 காவல் நிலையங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



முகாமில் கலந்து கொண்டவர்களுக்குப் பொன்னி மற்றும் ராஜேஷ்வரி ஆகிய மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் உடல்திறன், கண்பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவுப் பரிசோதனை, எலும்பு பரிசோதனை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளை நடத்தி ஆலோசனை வழங்கினர்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...