கோவையில் குரூப்-4 தேர்வுகள் நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

கோவையில் கோவையில் குரூப்-4 தேர்வுகள் நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: கோவையில் கோவையில் குரூப்-4 தேர்வுகள் நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 க்கான போட்டித்தேர்வு தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வினை கோவையில் இருந்து மட்டும் 57,192 பேர் எழுதுகின்றனர்.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் , தேர்வு நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், " தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, இன்று குரூப்– 4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் உள்ள 153 மையங்களில் 71,849 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 57,192 தேர்வர்கள் தேர்வெழுதினர். இத்தேர்வினை கண்காணிக்க 68 மொபைல் யூனிட்களும், 20 பறக்கும் படை குழுவும், 245 அறை கண்காணிப்பாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இத்தேர்வுகள் எவ்வித முறைகேடுகளுமின்றி சிறப்பாக நடைபெற்றது. தேர்வாளர்கள் சிரமமின்றி தேர்வு எழுத, தேர்வு மையங்களுக்குச் சென்றுவரும் வகையில் தேவையான சிறப்பு பேருந்து வசதி, பாதுகாப்பு வசதி, தளவாடங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது." என்றார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...