கோவையில் கோவையில் குரூப்-4 தேர்வுகள் நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவையில் கோவையில் குரூப்-4 தேர்வுகள் நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 க்கான போட்டித்தேர்வு தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வினை கோவையில் இருந்து மட்டும் 57,192 பேர் எழுதுகின்றனர்.
அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் , தேர்வு நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், " தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, இன்று குரூப்– 4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் உள்ள 153 மையங்களில் 71,849 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 57,192 தேர்வர்கள் தேர்வெழுதினர். இத்தேர்வினை கண்காணிக்க 68 மொபைல் யூனிட்களும், 20 பறக்கும் படை குழுவும், 245 அறை கண்காணிப்பாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இத்தேர்வுகள் எவ்வித முறைகேடுகளுமின்றி சிறப்பாக நடைபெற்றது. தேர்வாளர்கள் சிரமமின்றி தேர்வு எழுத, தேர்வு மையங்களுக்குச் சென்றுவரும் வகையில் தேவையான சிறப்பு பேருந்து வசதி, பாதுகாப்பு வசதி, தளவாடங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது." என்றார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 க்கான போட்டித்தேர்வு தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வினை கோவையில் இருந்து மட்டும் 57,192 பேர் எழுதுகின்றனர்.
அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் , தேர்வு நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், " தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, இன்று குரூப்– 4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் உள்ள 153 மையங்களில் 71,849 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 57,192 தேர்வர்கள் தேர்வெழுதினர். இத்தேர்வினை கண்காணிக்க 68 மொபைல் யூனிட்களும், 20 பறக்கும் படை குழுவும், 245 அறை கண்காணிப்பாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இத்தேர்வுகள் எவ்வித முறைகேடுகளுமின்றி சிறப்பாக நடைபெற்றது. தேர்வாளர்கள் சிரமமின்றி தேர்வு எழுத, தேர்வு மையங்களுக்குச் சென்றுவரும் வகையில் தேவையான சிறப்பு பேருந்து வசதி, பாதுகாப்பு வசதி, தளவாடங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது." என்றார்.