கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 10 மாடி கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதி பிரிவை மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே இன்று திறந்து வைத்தார்.
கோவை: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 10 மாடி கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதி பிரிவை மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே இன்று திறந்து வைத்தார்.

ஆவாரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கோவை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளுக்கு அதிநவீன மருத்துவ சிகிச்சைகளை அளிக்கும் விதமாக, 10 மாடி கொண்ட சிறப்பு சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

10 மாடிகளைக் கொண்ட இந்தப் புதிய கட்டடத்தில் ஜிஇ ஹெல்த்கேர் நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப மருத்துவ கருவிகள் உள்ளன. நோயாளிகளின் வசதிக்காக நாட்டிலேயே மிக துல்லியமான முடிவுகளைக் காட்டும் இந்தக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 7 அதிநவீன அறுவை சிகிச்சை மையங்கள், 6 படுக்கை வசதிகள் கொண்ட மூன்று பிரசவ அறைகள், 11 பெட் ஐ.சி.யு மற்றும் 16 படுக்கை பி.ஐ.சி.யு./ என்.ஐ.சி.யு. 95 அறைகள், 20 சொகுசு அறைகள் 82 மருத்துவர்களுக்கான மருத்துவ ஆலோசனை அறைகள், அல்ட்ரா சவுண்ட்ஸ், டிஜிட்டல் எக்ஸ்ரே, ஸ்டெல்த் ஸ்டேஷன், டயக்னஸ்டிக் கார்டியாலஜி, வெண்டிலேட்டர்ஸ், அனஸ்தீசியா மற்றும் வார்மர் போன்றவைகள் உள்ளன.