ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதி பிரிவு தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 10 மாடி கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதி பிரிவை மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே இன்று திறந்து வைத்தார்.


கோவை: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 10 மாடி கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதி பிரிவை மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே இன்று திறந்து வைத்தார். 



ஆவாரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கோவை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளுக்கு அதிநவீன மருத்துவ சிகிச்சைகளை அளிக்கும் விதமாக, 10 மாடி கொண்ட சிறப்பு சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



10 மாடிகளைக் கொண்ட இந்தப் புதிய கட்டடத்தில் ஜிஇ ஹெல்த்கேர் நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப மருத்துவ கருவிகள் உள்ளன. நோயாளிகளின் வசதிக்காக நாட்டிலேயே மிக துல்லியமான முடிவுகளைக் காட்டும் இந்தக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 7 அதிநவீன அறுவை சிகிச்சை மையங்கள், 6 படுக்கை வசதிகள் கொண்ட மூன்று பிரசவ அறைகள், 11 பெட் ஐ.சி.யு மற்றும் 16 படுக்கை பி.ஐ.சி.யு./ என்.ஐ.சி.யு. 95 அறைகள், 20 சொகுசு அறைகள் 82 மருத்துவர்களுக்கான மருத்துவ ஆலோசனை அறைகள், அல்ட்ரா சவுண்ட்ஸ், டிஜிட்டல் எக்ஸ்ரே, ஸ்டெல்த் ஸ்டேஷன், டயக்னஸ்டிக் கார்டியாலஜி, வெண்டிலேட்டர்ஸ், அனஸ்தீசியா மற்றும் வார்மர் போன்றவைகள் உள்ளன. 

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...