கோவையில் மத்திய அரசைக் கண்டித்து கருப்பு அங்கி அணிந்து, காங்கிரஸ் கட்சியினர் பக்கோடா விற்பனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : கோவையில் மத்திய அரசைக் கண்டித்து கருப்பு அங்கி அணிந்து, காங்கிரஸ் கட்சியினர் பக்கோடா விற்பனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலையே இல்லாமல் இருப்பதை விட பக்கோடா விற்பதும் ஒரு வேலைதான் என்று மாநிலங்களவையில் பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். இதேபோல, பிரதமர் மோடி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஒரு நபர் பக்கோடா விற்றால் தினமும் வீட்டுக்கு அன்று மாலை ரூ. 200 எடுத்துச் செல்கிறார் எனவும், அப்படியானால் அதுவேலை என்று எடுத்துக்கொள்ளப்படுமா..? இல்லை..? என்று பதில் கேள்வி எழுப்பினார். பிரதமரின் இந்தக் கருத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக கோவை காந்திபுரம் நகர் பேருந்துநிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசைக் கண்டித்து பட்டதாரிகள் அணியும் கருப்பு அங்கி அணிந்து பக்கோடா விற்பனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலைவாய்ப்பை உருவாக்காமல், பட்டதாரி இளைஞர்களை பக்கோடா போடச் சொல்லிய பிரதமர் மோடியைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியைக் கண்டித்து பதாகைகள் ஏந்தியவாறு, பக்கோடாவை சாலையில் சென்றவர்களுக்கு வழங்கினர். இதனையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் போலீசார் கைது செய்தனர்.

வேலையே இல்லாமல் இருப்பதை விட பக்கோடா விற்பதும் ஒரு வேலைதான் என்று மாநிலங்களவையில் பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். இதேபோல, பிரதமர் மோடி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஒரு நபர் பக்கோடா விற்றால் தினமும் வீட்டுக்கு அன்று மாலை ரூ. 200 எடுத்துச் செல்கிறார் எனவும், அப்படியானால் அதுவேலை என்று எடுத்துக்கொள்ளப்படுமா..? இல்லை..? என்று பதில் கேள்வி எழுப்பினார். பிரதமரின் இந்தக் கருத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக கோவை காந்திபுரம் நகர் பேருந்துநிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசைக் கண்டித்து பட்டதாரிகள் அணியும் கருப்பு அங்கி அணிந்து பக்கோடா விற்பனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலைவாய்ப்பை உருவாக்காமல், பட்டதாரி இளைஞர்களை பக்கோடா போடச் சொல்லிய பிரதமர் மோடியைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியைக் கண்டித்து பதாகைகள் ஏந்தியவாறு, பக்கோடாவை சாலையில் சென்றவர்களுக்கு வழங்கினர். இதனையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் போலீசார் கைது செய்தனர்.