கோவை, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக மழை

நீலகிரி மாவட்டத்தில் திடீரென பெய்த பரவலான மழையால், விவசாயிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


நீலகிரி : கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் பரவலான மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 



கடந்த இரு மாதங்களாக நீலகிரியில் கடும் பனிபொழிவு நிலவி வந்தது. இதனால், வனங்களில் பசுமை குறைந்து வறட்சி தலைதூக்கியது. விவசாய நிலங்களிலும் வறட்சி ஏற்பட்டதால் விவசாயிகள் மழையை எதிர் நோக்கி காத்திருந்தனர். கடந்து இரு தினங்களுக்கு முன்பு இரவு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், நேற்று மதியம் உதகை, கோத்தகிரி, முதுமலை பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் கன மழை பெய்ததால், வறட்சியின் பிடியிலிருந்த முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவி வந்த வனத் தீ அபாயம் நீங்கியது. 

முதுமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள், மசினகுடி வனப்பகுதியிலும் மழை பெய்தது. இந்த மழை காரணமாக பூமி நனைந்து பகல் நேரத்தில் நிலவி வந்த வெட்பம் தணிந்து ரம்மியமான காலநிலை நிலவியது. இதை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர். மழை பெய்ததால், விவசாயிகள் விதைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மழை தொடரும் பட்சத்தில் நீர்த்தேக்கங்களில் நீர்இருப்பு அதிகரித்து, கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உள்ளாட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இதேபோல, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...