திருப்பூரில் குற்றம் நடக்கும் இடங்களுக்கு போலீசார் விரைந்து செல்வதை கண்காணிக்கும் வகையில், ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய செல்போன்கள் காவல் ஆய்வாளர்கள் ஜீப்பில் பொருத்தப்பட்டது.
திருப்பூர் : திருப்பூரில் குற்றம் நடக்கும் இடங்களுக்கு போலீசார் விரைந்து செல்வதை கண்காணிக்கும் வகையில், ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய செல்போன்கள் காவல் ஆய்வாளர்கள் ஜீப்பில் பொருத்தப்பட்டது.
108 ஆம்புலன்ஸை போலவே தமிழகம் முழுவதும் குற்ற சம்பவங்கள் குறித்து தெரிவிக்க சென்னையை தலைமையிடமாகக் கொண்ட கட்டுப்பாட்டு அறை உருவாக உள்ளது. குற்ற சம்பவங்கள் குறித்த தகவல்களை சம்பந்தபட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவிக்கவும், குற்றம் நடந்த இடத்திற்கு போலீஸார் எவ்வித தடையுமின்றி விரைவாகச் செல்வதை கண்காணிக்கும் வகையில், ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய செல்போன்கள் அனைத்து காவல்நிலைய ஆய்வாளர்களின் ஜீப்களில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகர மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து காவல்நிலைய ஆய்வாளர்களின் ஜீப்பில் அதற்கென உருவாக்கப்பட்ட செயலியுடன் கூடிய இந்த ஜி.பி.எஸ்., செல்போன் பொருத்தப்பட்டது. திருப்பூர் மாநகர பிரிவில் 10 ஜீப்களுக்கும், திருப்பூர் மாவட்ட பிரிவில் 15 ஜீப்களுக்கும் பொருத்தப்பட்டுள்ளது
108 ஆம்புலன்ஸை போலவே தமிழகம் முழுவதும் குற்ற சம்பவங்கள் குறித்து தெரிவிக்க சென்னையை தலைமையிடமாகக் கொண்ட கட்டுப்பாட்டு அறை உருவாக உள்ளது. குற்ற சம்பவங்கள் குறித்த தகவல்களை சம்பந்தபட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவிக்கவும், குற்றம் நடந்த இடத்திற்கு போலீஸார் எவ்வித தடையுமின்றி விரைவாகச் செல்வதை கண்காணிக்கும் வகையில், ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய செல்போன்கள் அனைத்து காவல்நிலைய ஆய்வாளர்களின் ஜீப்களில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகர மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து காவல்நிலைய ஆய்வாளர்களின் ஜீப்பில் அதற்கென உருவாக்கப்பட்ட செயலியுடன் கூடிய இந்த ஜி.பி.எஸ்., செல்போன் பொருத்தப்பட்டது. திருப்பூர் மாநகர பிரிவில் 10 ஜீப்களுக்கும், திருப்பூர் மாவட்ட பிரிவில் 15 ஜீப்களுக்கும் பொருத்தப்பட்டுள்ளது