கோவையில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்து வாகனம் ஓட்டிய பொதுமக்களுக்கு மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜித்குமார் பாராட்டி பரிசு வழங்கினார்.
கோவை : கோவையில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்து வாகனம் ஓட்டிய பொதுமக்களுக்கு மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜித்குமார் பாராட்டி பரிசு வழங்கினார்.
கோவை மாநகர காவல்துறை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் சார்பில் லட்சுமி மில்ஸ் சந்திப்பு பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் மாணவர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

முன்னதாக கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜித்குமார் கொடி அசைத்து இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ஹெல்மெட் அணிந்தும், சீட் பெல்ட் அணிந்தும் மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்தும் வாகனம் ஓட்டிய பொதுமக்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
கோவை மாநகர காவல்துறை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் சார்பில் லட்சுமி மில்ஸ் சந்திப்பு பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் மாணவர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

முன்னதாக கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜித்குமார் கொடி அசைத்து இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ஹெல்மெட் அணிந்தும், சீட் பெல்ட் அணிந்தும் மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்தும் வாகனம் ஓட்டிய பொதுமக்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார்.