தற்காலிக புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் தற்காலிக புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை : கோவையில் தற்காலிக புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:- 

கோவை மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் அலுவலகத்தில் புதியதாக தற்காலிகமாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள 3 புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர்  பதவிக்கு 01.07.2017 அன்றைய நிலையில் 35 வயதிற்கு மிகாமலும், ஏதாவது ஒரு பட்டம் மற்றும் கணிப்பொறியில் சான்று (பட்டயப்படிப்பு) பெற்றிருப்பவரும் அரசு நியமனத்தில் பின்பற்றப்படும் இனசுழற்சி முறையைப் பின்பற்றி பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையிலிருந்து வழங்கப்படும் கேள்வித்தாள் வைத்துத் தேர்வு நடத்தி நேர்காணல் வைத்துத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ஒன்றுக்குத் தொகுப்பு ஊதியமாக ரூ.15000 மட்டும் வழங்கப்படும். இதரபடிகள் ஏதும் வழங்கப்படமாட்டாது.  மேற்கண்ட தகுதிகளை உடைய தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து 22.02.2018 மாலை 05.45மணி வரை “புள்ளியியல் துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பழைய கட்டிடம், முதல் தளம், கோயம்புத்தூர். 641018” (தொலைபேசி எண் 0422-2309685) என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பிவைக்க வேண்டப்படுகிறது.

தேர்வு நடைபெறும் விவரம் தகுதியுள்ள நபர்களுக்கு தனித்தனியாக அழைப்புகடிதம் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.  காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...