தற்காலிக புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் தற்காலிக புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை : கோவையில் தற்காலிக புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:- 

கோவை மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் அலுவலகத்தில் புதியதாக தற்காலிகமாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள 3 புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர்  பதவிக்கு 01.07.2017 அன்றைய நிலையில் 35 வயதிற்கு மிகாமலும், ஏதாவது ஒரு பட்டம் மற்றும் கணிப்பொறியில் சான்று (பட்டயப்படிப்பு) பெற்றிருப்பவரும் அரசு நியமனத்தில் பின்பற்றப்படும் இனசுழற்சி முறையைப் பின்பற்றி பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையிலிருந்து வழங்கப்படும் கேள்வித்தாள் வைத்துத் தேர்வு நடத்தி நேர்காணல் வைத்துத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ஒன்றுக்குத் தொகுப்பு ஊதியமாக ரூ.15000 மட்டும் வழங்கப்படும். இதரபடிகள் ஏதும் வழங்கப்படமாட்டாது.  மேற்கண்ட தகுதிகளை உடைய தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து 22.02.2018 மாலை 05.45மணி வரை “புள்ளியியல் துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பழைய கட்டிடம், முதல் தளம், கோயம்புத்தூர். 641018” (தொலைபேசி எண் 0422-2309685) என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பிவைக்க வேண்டப்படுகிறது.

தேர்வு நடைபெறும் விவரம் தகுதியுள்ள நபர்களுக்கு தனித்தனியாக அழைப்புகடிதம் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.  காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...