கோவையில் உள்ள தமிழ்நாடு வனஉயர் பயிற்சியகத்தில் பல்லுயிர் பரவல் சட்டம் தொடர்பான பயிலரங்கம் நடைபெற்றது.
கோவை : கோவையில் உள்ள தமிழ்நாடு வனஉயர் பயிற்சியகத்தில் பல்லுயிர் பரவல் சட்டம் தொடர்பான பயிலரங்கம் நடைபெற்றது.

பல்லுயிர்ப் பரவல் சட்டம் 2002, அணுகுதல் மற்றும் பங்கிடுதல் வழிமுறை தொடர்பான பயிலரங்கம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.
இப்பயிலரங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், " பல்லுயிர்ப்பரவல் பாதுகாப்பு, பயன்படுத்தும் அளவு மற்றும் செழுமை மற்றும் உயிரின ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் பயன்களை சமபங்கிடுதல் மற்றும் பல்லுயிர்ப்பரவல் தகவல்கள் பற்றி இச்சட்டம் வகை செய்கிறது.
பல்லுயிர்ப்பரவல் பற்றிய பாரம்பரிய தகவல்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. உலக பல்லுயிர்ப்பரவல் உடன்பாடு 1992-ம் ஆண்டு ஜீன் 5ம் தேதி ரியோடி ஜெனிரோவில் நடந்த ஐக்கிய நாட்டு பல்லுயிர்ப்பரவல் மாநாட்டில் இந்திய கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.
மேலே கூறப்பட்ட இந்த பல்லுயிர்ப்பரவல் மரபு 1993-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி கட்டாயப் படுத்தப்பட்டது.
இந்திய அரசு மற்றும் ஜெர்மனியை அரசு ஒருங்கிணைந்து ஒத்துழைப்புடன் அணுகுதல் மற்றும் பங்கிடுதல் கூட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தமிழ்நாடு, மஹாராஷ்டிரம், உத்திரகாண்ட் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.
இந்த பயிலரங்கத்தில் தமிழ்நாடு வனஉயர் பயிற்சியக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் இயக்குநர் கேட் தவிவேதி, தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் கூடுதல் இயக்குநர் திருநாவுக்கரசு,மற்றும் சுற்றுசூழல் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பல்லுயிர்ப் பரவல் சட்டம் 2002, அணுகுதல் மற்றும் பங்கிடுதல் வழிமுறை தொடர்பான பயிலரங்கம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.
இப்பயிலரங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், " பல்லுயிர்ப்பரவல் பாதுகாப்பு, பயன்படுத்தும் அளவு மற்றும் செழுமை மற்றும் உயிரின ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் பயன்களை சமபங்கிடுதல் மற்றும் பல்லுயிர்ப்பரவல் தகவல்கள் பற்றி இச்சட்டம் வகை செய்கிறது.
பல்லுயிர்ப்பரவல் பற்றிய பாரம்பரிய தகவல்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. உலக பல்லுயிர்ப்பரவல் உடன்பாடு 1992-ம் ஆண்டு ஜீன் 5ம் தேதி ரியோடி ஜெனிரோவில் நடந்த ஐக்கிய நாட்டு பல்லுயிர்ப்பரவல் மாநாட்டில் இந்திய கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.
மேலே கூறப்பட்ட இந்த பல்லுயிர்ப்பரவல் மரபு 1993-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி கட்டாயப் படுத்தப்பட்டது.
இந்திய அரசு மற்றும் ஜெர்மனியை அரசு ஒருங்கிணைந்து ஒத்துழைப்புடன் அணுகுதல் மற்றும் பங்கிடுதல் கூட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தமிழ்நாடு, மஹாராஷ்டிரம், உத்திரகாண்ட் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.
இந்த பயிலரங்கத்தில் தமிழ்நாடு வனஉயர் பயிற்சியக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் இயக்குநர் கேட் தவிவேதி, தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் கூடுதல் இயக்குநர் திருநாவுக்கரசு,மற்றும் சுற்றுசூழல் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.