தமிழ்நாடு வனஉயர் பயிற்சியகத்தில் பல்லுயிர் பரவல் சட்டம் தொடர்பான பயிலரங்கம்

கோவையில் உள்ள தமிழ்நாடு வனஉயர் பயிற்சியகத்தில் பல்லுயிர் பரவல் சட்டம் தொடர்பான பயிலரங்கம் நடைபெற்றது.

கோவை : கோவையில் உள்ள தமிழ்நாடு வனஉயர் பயிற்சியகத்தில் பல்லுயிர் பரவல் சட்டம் தொடர்பான பயிலரங்கம்  நடைபெற்றது. 



பல்லுயிர்ப் பரவல் சட்டம் 2002, அணுகுதல் மற்றும் பங்கிடுதல் வழிமுறை தொடர்பான பயிலரங்கம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 

இப்பயிலரங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், " பல்லுயிர்ப்பரவல் பாதுகாப்பு, பயன்படுத்தும் அளவு மற்றும் செழுமை  மற்றும் உயிரின ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் பயன்களை சமபங்கிடுதல் மற்றும் பல்லுயிர்ப்பரவல் தகவல்கள் பற்றி இச்சட்டம் வகை செய்கிறது. 

பல்லுயிர்ப்பரவல் பற்றிய பாரம்பரிய தகவல்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. உலக பல்லுயிர்ப்பரவல் உடன்பாடு 1992-ம் ஆண்டு ஜீன் 5ம் தேதி ரியோடி ஜெனிரோவில் நடந்த ஐக்கிய நாட்டு பல்லுயிர்ப்பரவல் மாநாட்டில் இந்திய கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. 

மேலே கூறப்பட்ட இந்த பல்லுயிர்ப்பரவல் மரபு 1993-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி கட்டாயப் படுத்தப்பட்டது. 

இந்திய அரசு மற்றும் ஜெர்மனியை அரசு ஒருங்கிணைந்து ஒத்துழைப்புடன் அணுகுதல் மற்றும் பங்கிடுதல் கூட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  இத்திட்டம் தமிழ்நாடு, மஹாராஷ்டிரம், உத்திரகாண்ட் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.

இந்த பயிலரங்கத்தில் தமிழ்நாடு வனஉயர் பயிற்சியக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் இயக்குநர் கேட் தவிவேதி, தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் கூடுதல் இயக்குநர் திருநாவுக்கரசு,மற்றும் சுற்றுசூழல் அமைப்பு பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...