தமிழ்நாடு வனஉயர் பயிற்சியகத்தில் பல்லுயிர் பரவல் சட்டம் தொடர்பான பயிலரங்கம்

கோவையில் உள்ள தமிழ்நாடு வனஉயர் பயிற்சியகத்தில் பல்லுயிர் பரவல் சட்டம் தொடர்பான பயிலரங்கம் நடைபெற்றது.

கோவை : கோவையில் உள்ள தமிழ்நாடு வனஉயர் பயிற்சியகத்தில் பல்லுயிர் பரவல் சட்டம் தொடர்பான பயிலரங்கம்  நடைபெற்றது. 



பல்லுயிர்ப் பரவல் சட்டம் 2002, அணுகுதல் மற்றும் பங்கிடுதல் வழிமுறை தொடர்பான பயிலரங்கம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 

இப்பயிலரங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், " பல்லுயிர்ப்பரவல் பாதுகாப்பு, பயன்படுத்தும் அளவு மற்றும் செழுமை  மற்றும் உயிரின ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் பயன்களை சமபங்கிடுதல் மற்றும் பல்லுயிர்ப்பரவல் தகவல்கள் பற்றி இச்சட்டம் வகை செய்கிறது. 

பல்லுயிர்ப்பரவல் பற்றிய பாரம்பரிய தகவல்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. உலக பல்லுயிர்ப்பரவல் உடன்பாடு 1992-ம் ஆண்டு ஜீன் 5ம் தேதி ரியோடி ஜெனிரோவில் நடந்த ஐக்கிய நாட்டு பல்லுயிர்ப்பரவல் மாநாட்டில் இந்திய கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. 

மேலே கூறப்பட்ட இந்த பல்லுயிர்ப்பரவல் மரபு 1993-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி கட்டாயப் படுத்தப்பட்டது. 

இந்திய அரசு மற்றும் ஜெர்மனியை அரசு ஒருங்கிணைந்து ஒத்துழைப்புடன் அணுகுதல் மற்றும் பங்கிடுதல் கூட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  இத்திட்டம் தமிழ்நாடு, மஹாராஷ்டிரம், உத்திரகாண்ட் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.

இந்த பயிலரங்கத்தில் தமிழ்நாடு வனஉயர் பயிற்சியக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் இயக்குநர் கேட் தவிவேதி, தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் கூடுதல் இயக்குநர் திருநாவுக்கரசு,மற்றும் சுற்றுசூழல் அமைப்பு பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...