விஷம் குடித்த பெண்ணை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்சுடன் கார் மோதி விபத்து.!

பல்லடம் அருகே விஷம் குடித்த பெண்ணை அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற ஆம்புலன்சுடன் கார் மோதிய விபத்தில் மூன்றுபேர் காயமடைந்தனர்.


திருப்பூர் : பல்லடம் அருகே விஷம் குடித்த பெண்ணை அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற ஆம்புலன்சுடன் கார் மோதிய விபத்தில் மூன்றுபேர் காயமடைந்தனர்.

வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி சித்ரா(27). விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவரது நிலைமை மோசமாகவே அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 

அதன் பேரில் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த ஆம்புலன்ஸ் கோடாங்கிபாளையம் அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில், அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்ற சித்ரா மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விக்கி ஆகியோர் படுகாயமடைந்தனர். 

விபத்தைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் சித்ரா-வை வேறு ஒரு ஆம்புலன்சு மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...