விஷம் குடித்த பெண்ணை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்சுடன் கார் மோதி விபத்து.!

பல்லடம் அருகே விஷம் குடித்த பெண்ணை அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற ஆம்புலன்சுடன் கார் மோதிய விபத்தில் மூன்றுபேர் காயமடைந்தனர்.


திருப்பூர் : பல்லடம் அருகே விஷம் குடித்த பெண்ணை அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற ஆம்புலன்சுடன் கார் மோதிய விபத்தில் மூன்றுபேர் காயமடைந்தனர்.

வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி சித்ரா(27). விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவரது நிலைமை மோசமாகவே அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 

அதன் பேரில் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த ஆம்புலன்ஸ் கோடாங்கிபாளையம் அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில், அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்ற சித்ரா மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விக்கி ஆகியோர் படுகாயமடைந்தனர். 

விபத்தைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் சித்ரா-வை வேறு ஒரு ஆம்புலன்சு மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...