பல்லடம் அருகே விஷம் குடித்த பெண்ணை அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற ஆம்புலன்சுடன் கார் மோதிய விபத்தில் மூன்றுபேர் காயமடைந்தனர்.
திருப்பூர் : பல்லடம் அருகே விஷம் குடித்த பெண்ணை அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற ஆம்புலன்சுடன் கார் மோதிய விபத்தில் மூன்றுபேர் காயமடைந்தனர்.
வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி சித்ரா(27). விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவரது நிலைமை மோசமாகவே அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
அதன் பேரில் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த ஆம்புலன்ஸ் கோடாங்கிபாளையம் அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்ற சித்ரா மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விக்கி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
விபத்தைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் சித்ரா-வை வேறு ஒரு ஆம்புலன்சு மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.