கமலுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் பதில் சொல்லும்: நடிகர் ரஜினி

அரசியல் களத்தில் நடிகர் கமலுடன் இணைவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியல் களத்தில் நடிகர் கமலுடன் இணைவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். உள்ளாட்சி  தேர்தல்களில் பங்கேற்க மாட்டோம் என்று தெரிவித்த ரஜினிகாந்த், நாடாளுமன்ற தேர்தல் குறித்து அந்த நேரத்தில் முடிவு செய்வேன் என்றும், வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் கூயிருந்தார். இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த், தனது கட்சி துவங்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உறுப்பினர்களை இணைக்கும் பணியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்.  நடிகர் கமலுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் பதில் சொல்லும். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். என்றார்.

முன்னதாக, நடிகர் ரஜினிகாந்துடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக என்ற கேள்விக்கு வார இதழில் நடிகர் கமல் எழுதிய கட்டுரையில், ரஜினியுடன் இணைவது என்பது இப்போது எடுக்க வேண்டிய முடிவு கிடையாது. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். நானும் ரஜினியும் கூட்டணி வைப்பது தேவையா என்பது குறித்து இருவருமே யோசிக்க வேண்டும். இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா என்று பார்க்கவேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...