கமலுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் பதில் சொல்லும்: நடிகர் ரஜினி

அரசியல் களத்தில் நடிகர் கமலுடன் இணைவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியல் களத்தில் நடிகர் கமலுடன் இணைவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். உள்ளாட்சி  தேர்தல்களில் பங்கேற்க மாட்டோம் என்று தெரிவித்த ரஜினிகாந்த், நாடாளுமன்ற தேர்தல் குறித்து அந்த நேரத்தில் முடிவு செய்வேன் என்றும், வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் கூயிருந்தார். இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த், தனது கட்சி துவங்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உறுப்பினர்களை இணைக்கும் பணியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்.  நடிகர் கமலுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் பதில் சொல்லும். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். என்றார்.

முன்னதாக, நடிகர் ரஜினிகாந்துடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக என்ற கேள்விக்கு வார இதழில் நடிகர் கமல் எழுதிய கட்டுரையில், ரஜினியுடன் இணைவது என்பது இப்போது எடுக்க வேண்டிய முடிவு கிடையாது. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். நானும் ரஜினியும் கூட்டணி வைப்பது தேவையா என்பது குறித்து இருவருமே யோசிக்க வேண்டும். இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா என்று பார்க்கவேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...