திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வெறிநாய்கள் கடித்து குதறியதால் 7 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. வெறிநாய்களால் தொடரும் இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வெறிநாய்கள் கடித்து குதறியதால் 7 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. வெறிநாய்களால் தொடரும் இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தாராபுரம் பகுதியில் இரச்சிமஸ்தான் நகரில் வசித்து வரும் பொன்னுசாமி, காளியம்மாள் தம்பதியினர் ஆடுகள் மேய்த்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலையில் நாய்கள் குறைக்கும் சத்தம்கேட்டு ஆட்டு கொட்டகைக்கு காளியம்மாள் சென்று பார்த்தபோது ஏழு ஆடுகள் வெறிநாய்கள் கடித்து குதறி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், பல ஆடுகள் ஆட்டு கொட்டகையிலிருந்து நாய்களுக்குப் பயந்து சிதறி ஓடியுள்ளன. காணாமல் போன ஆடுகளை அவர்கள் தேடி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெறிநாய்கடித்து 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். நேற்று தாராபுரம் கோவில்பாளையத்தில் வெறிநாய்கள் கடித்து 16 ஆடுகள் பலியானது. இந்த நிலையில், இன்று இரச்சிமஸ்தான் நகரில் 7 ஆடுகள் வெறிநாய்களால் கொல்லப்பட்ட சம்பவம் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நகராட்சி மற்றும் வருவாய் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டாக உள்ளது.
தாராபுரம் பகுதியில் இரச்சிமஸ்தான் நகரில் வசித்து வரும் பொன்னுசாமி, காளியம்மாள் தம்பதியினர் ஆடுகள் மேய்த்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலையில் நாய்கள் குறைக்கும் சத்தம்கேட்டு ஆட்டு கொட்டகைக்கு காளியம்மாள் சென்று பார்த்தபோது ஏழு ஆடுகள் வெறிநாய்கள் கடித்து குதறி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், பல ஆடுகள் ஆட்டு கொட்டகையிலிருந்து நாய்களுக்குப் பயந்து சிதறி ஓடியுள்ளன. காணாமல் போன ஆடுகளை அவர்கள் தேடி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெறிநாய்கடித்து 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். நேற்று தாராபுரம் கோவில்பாளையத்தில் வெறிநாய்கள் கடித்து 16 ஆடுகள் பலியானது. இந்த நிலையில், இன்று இரச்சிமஸ்தான் நகரில் 7 ஆடுகள் வெறிநாய்களால் கொல்லப்பட்ட சம்பவம் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நகராட்சி மற்றும் வருவாய் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டாக உள்ளது.