20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நிர்வாகக் கோப்புகள் தேக்கமடைந்துள்ளன.
திருப்பூர்: 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நிர்வாகக் கோப்புகள் தேக்கமடைந்துள்ளன.

அரசு விடுமுறை நாளில் பணியாற்றும் அலுவலருக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும், மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும், நாளையும் நடக்கும் இந்த தற்செயல் விடுப்பு போராட்டத்தால், அலுவலர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால், திருப்பூரில் வருவாய்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும், கோப்புக்கள் அனைத்தும் தேங்கி கிடப்பதால், நிர்வாக பணிகள் ஸ்தம்பித்துள்ளது.

அரசு விடுமுறை நாளில் பணியாற்றும் அலுவலருக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும், மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும், நாளையும் நடக்கும் இந்த தற்செயல் விடுப்பு போராட்டத்தால், அலுவலர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால், திருப்பூரில் வருவாய்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும், கோப்புக்கள் அனைத்தும் தேங்கி கிடப்பதால், நிர்வாக பணிகள் ஸ்தம்பித்துள்ளது.