இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பாக கட்டிமுடிக்கப்பட்ட 160 கழிப்பறைகளை, மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று கிரேண்ட் ரீகண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
கோவை: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பாக கட்டிமுடிக்கப்பட்ட 160 கழிப்பறைகளை, மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று கிரேண்ட் ரீகண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

வார்டு எண் 16, 17, 18 மற்றும் 19-க்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளை, திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத பகுதியாக மாற்றும் முயற்சியாக, தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் 160 கழிவறைகள் இந்தியன் ஆயில் நிறுவனத்தால் கட்டிமுடிக்கப்பட்டன. இந்த தனிக்கழிப்பறைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின், மாநில நிர்வாக இயக்குனர் R. சித்தார்த்தன், கோவை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயனிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியிருப்பு வாசிகள், தனிக்கழிப்பறைகளை கட்டித்தந்த இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டனர். இதையடுத்து, பேசிய மாநகராட்சி ஆணையாளர், பொதுமக்களின் தேவைக்கேற்ப நகரின் பெரும்பாலான இடத்தில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் நூறு சதவிகிதம் திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத, சுகாதாரமான நகரமாகக் கோவையை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், அதற்கு, பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் மாநகராட்சியோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், கட்டிமுடிக்கப்பட்ட கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி, நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


வார்டு எண் 16, 17, 18 மற்றும் 19-க்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளை, திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத பகுதியாக மாற்றும் முயற்சியாக, தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் 160 கழிவறைகள் இந்தியன் ஆயில் நிறுவனத்தால் கட்டிமுடிக்கப்பட்டன. இந்த தனிக்கழிப்பறைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின், மாநில நிர்வாக இயக்குனர் R. சித்தார்த்தன், கோவை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயனிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியிருப்பு வாசிகள், தனிக்கழிப்பறைகளை கட்டித்தந்த இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டனர். இதையடுத்து, பேசிய மாநகராட்சி ஆணையாளர், பொதுமக்களின் தேவைக்கேற்ப நகரின் பெரும்பாலான இடத்தில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் நூறு சதவிகிதம் திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத, சுகாதாரமான நகரமாகக் கோவையை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், அதற்கு, பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் மாநகராட்சியோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், கட்டிமுடிக்கப்பட்ட கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி, நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
