தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 160 கழிவறைகள் மாநகராட்சியிடம் ஒப்படைப்பு

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பாக கட்டிமுடிக்கப்பட்ட 160 கழிப்பறைகளை, மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று கிரேண்ட் ரீகண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

கோவை: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பாக கட்டிமுடிக்கப்பட்ட 160 கழிப்பறைகளை, மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று கிரேண்ட் ரீகண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.



வார்டு எண் 16, 17, 18 மற்றும் 19-க்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளை, திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத பகுதியாக மாற்றும் முயற்சியாக, தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் 160 கழிவறைகள் இந்தியன் ஆயில் நிறுவனத்தால் கட்டிமுடிக்கப்பட்டன. இந்த தனிக்கழிப்பறைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின், மாநில நிர்வாக இயக்குனர் R. சித்தார்த்தன், கோவை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயனிடம் ஒப்படைத்தார்.



இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியிருப்பு வாசிகள், தனிக்கழிப்பறைகளை கட்டித்தந்த இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டனர். இதையடுத்து, பேசிய மாநகராட்சி ஆணையாளர், பொதுமக்களின் தேவைக்கேற்ப நகரின் பெரும்பாலான இடத்தில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் நூறு சதவிகிதம் திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத, சுகாதாரமான நகரமாகக் கோவையை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், அதற்கு, பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் மாநகராட்சியோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



மேலும், கட்டிமுடிக்கப்பட்ட கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி, நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...