மணல் குவாரிகளை மூடுவதற்கு விதிக்கப்பட்ட உத்தரவிற்கு இடைக்கால தடை

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை மூடுவதற்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை விதித்திருந்த உத்தரவிற்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை மூடுவதற்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை விதித்திருந்த உத்தரவிற்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

6 மாதத்துக்குள் மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மணல் குவாரி தடையால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படுவதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது. தமிழக அரசின் வாதத்தை ஏற்று உச்சநீதிமன்றம் மணல் குவாரிகளை மூடுவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. 

முன்னதாக, மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும் என தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்க அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், கடந்த நவம்பர் 29-ம் தேதி புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதில், மணல் குவாரிகள் அனைத்தையும் படிப்படியாக 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும் என்ற உத்தரவு தொடரும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...