மணல் குவாரிகளை மூடுவதற்கு விதிக்கப்பட்ட உத்தரவிற்கு இடைக்கால தடை

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை மூடுவதற்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை விதித்திருந்த உத்தரவிற்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை மூடுவதற்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை விதித்திருந்த உத்தரவிற்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

6 மாதத்துக்குள் மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மணல் குவாரி தடையால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படுவதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது. தமிழக அரசின் வாதத்தை ஏற்று உச்சநீதிமன்றம் மணல் குவாரிகளை மூடுவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. 

முன்னதாக, மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும் என தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்க அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், கடந்த நவம்பர் 29-ம் தேதி புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதில், மணல் குவாரிகள் அனைத்தையும் படிப்படியாக 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும் என்ற உத்தரவு தொடரும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...