உக்கடம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்

கோவை உக்கடம் பேருந்து நிலையம் முன்பு அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



கோவை: கோவை உக்கடம் பேருந்து நிலையம் முன்பு அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அரசுப் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.  பேருந்து நிலையம் முன்பு உள்ள போக்குவரத்து சிக்னல் வேலை செய்யவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு மத்தியில் சிக்னலை கடந்து சென்று கொண்டிருந்தனர். 

இந்த நிலையில், பாலக்காடு சாலையில் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து, உக்கடம் பேருந்து நிலையத்திற்குள் திரும்ப முயன்றது. அப்போது, சுங்கம் வழியாக வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், முன்புற சக்கரம் இருசக்கர வாகனத்தின் மீது ஏறி இறங்கியது. இதில், வாகனத்தில் வந்த இளைஞர்கள் இரண்டு பேரும் பேருந்தின் கீழ் சிக்கிக் கொண்டனர்.



இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசுப் பேருந்தை நகர்த்தி வைத்து விபத்தில் சிக்கிய இளைஞர்களை மீட்டனர். இதில், சதீஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஹரிபிரசாத் என்பவர் பலத்த காயமடைந்தார். அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்திற்கு காரணம் அரசுப் பேருந்து ஒட்டுநரின் கவனக்குறைவு தான் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...