அரசியலில் பிரவேசிக்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு விபரம்

ஜனவரி 02 

அரசியல் களத்தில் குதிக்கும் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் சம்பாதித்த சொத்து மதிப்பு குறித்த தகவலை பின்ஆப் (finapp) வெளியிட்டு உள்ளது. 

ரஜினிகாந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார். இந்த தகவல் வெளியானவுடன், தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வரவேற்பு தெரிவித்தனர். உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் நடிகர் ரஜினியின் அரசியல் வருகை  குறித்து அரசியல் தலைவர்கள் பெரிய அளவில் பேசி வருகின்றனர். ரஜினியின் அரசியல் வருகையை பாஜக தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அதிகப்படியான ஆதரவு அளித்து வருகின்றனர். ரஜினி எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவார்கள் என்ற கேள்வி மேலேழுந்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் ரஜினிகாந்தின் வருவாயில் குறிப்பிட்ட அளவிலான பங்குகள் தொண்டு நிறுவனங்களுக்குச் செல்வதாகக் கூறப்படும் நிலையில், தற்போதைய சொத்து மதிப்பு ரூ. 360 கோடி என்று பின்ஆப் வெளியிட்டுள்ளது. ரஜினியின் சொத்து மதிப்பு என்பது திரைப்படத்தில் இருந்து வரும் ஊதியம், வீடு மற்றும் தனிப்பட்ட முதலீடுகள் போன்றவற்றினை வைத்துக் கணக்கிடப்பட்டதாக பின்ஆப் தெரிவித்துள்ளது.

சராசரியாகத் திரைப்படத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் ரூ. 55 கோடி எனவும், முதலீடுகள் மூலமாக 110 கோடி ரூபாய், ரேன்ஞ் ரோவர், பெண்ட்லி, மற்றும் டொயோட்டா இன்னோவா என்ற 3 ஆடம்பர கார்கள் மட்டுமே ரஜினியிடம் உள்ளது. இதன்மதிப்பு ரூ.2.5 கோடி, ஆண்டுக்கு வருமான வரி 13 கோடி என இவரது சொத்துக்கள் மதிப்பிடப்பட்டுள்ளது. ரஜினி சென்னை போயஸ் தோட்ட வீட்டை 2002-ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.35 கோடியாகும். 

ரஜினிகாந்த் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதும் ரஜினிகாந்த் தான் நடித்த படம் சரியாக வசூலிக்கவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு குறிப்பிட்ட அளவிலான பணத்தினைத் திரும்பவும் அளிப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...