50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மீட்ட போலீசார், உரியவரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவையை சேர்ந்த டி. கிருஷ்ணன், பி.என். புதூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஜூன் 10-ஆம் தேதி ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள கனரா வங்கி கிளையில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது, தவறுதலாக ரூ.40 ஆயிரம் கீழே விழுந்துள்ளது. இதனை அருகில் இருந்த ஒருவர் எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பி-2 ஆர்.எஸ்.புரம் புலனாய்வு பிரிவு காவல் நிலைய சரக உதவி ஆணையர் செல்லதுரை உத்தரவின்படி, காவல் ஆய்வாளர் காமாட்சிநாதன் வழிகாட்டுதலில், சிறப்பு சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தலைமை காவலர்கள் சிந்தன், நாகூர் கனி மற்றும் இரண்டாம் நிலை காவலர் ரஞ்சித் குமார் ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையின் போது சம்பவ இடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, பணத்தை எடுத்துச் சென்ற நபரின் இருப்பிடம் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நபர் இரண்டு நாட்கள் வெளியூரில் இருந்ததும், பின்னர் தாமாக முன்வந்து பணத்தை ஒப்படைக்க தயாராக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர் எடுத்துச் சென்ற ரூ.40 ஆயிரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, ஆர்.எஸ்.புரம் சரக உதவி ஆணையர் முன்னிலையில் உரியவரான கிருஷ்ணனிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...