அரசியலில் பிரவேசிக்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு விபரம்

ஜனவரி 02 

அரசியல் களத்தில் குதிக்கும் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் சம்பாதித்த சொத்து மதிப்பு குறித்த தகவலை பின்ஆப் (finapp) வெளியிட்டு உள்ளது. 

ரஜினிகாந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார். இந்த தகவல் வெளியானவுடன், தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வரவேற்பு தெரிவித்தனர். உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் நடிகர் ரஜினியின் அரசியல் வருகை  குறித்து அரசியல் தலைவர்கள் பெரிய அளவில் பேசி வருகின்றனர். ரஜினியின் அரசியல் வருகையை பாஜக தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அதிகப்படியான ஆதரவு அளித்து வருகின்றனர். ரஜினி எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவார்கள் என்ற கேள்வி மேலேழுந்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் ரஜினிகாந்தின் வருவாயில் குறிப்பிட்ட அளவிலான பங்குகள் தொண்டு நிறுவனங்களுக்குச் செல்வதாகக் கூறப்படும் நிலையில், தற்போதைய சொத்து மதிப்பு ரூ. 360 கோடி என்று பின்ஆப் வெளியிட்டுள்ளது. ரஜினியின் சொத்து மதிப்பு என்பது திரைப்படத்தில் இருந்து வரும் ஊதியம், வீடு மற்றும் தனிப்பட்ட முதலீடுகள் போன்றவற்றினை வைத்துக் கணக்கிடப்பட்டதாக பின்ஆப் தெரிவித்துள்ளது.

சராசரியாகத் திரைப்படத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் ரூ. 55 கோடி எனவும், முதலீடுகள் மூலமாக 110 கோடி ரூபாய், ரேன்ஞ் ரோவர், பெண்ட்லி, மற்றும் டொயோட்டா இன்னோவா என்ற 3 ஆடம்பர கார்கள் மட்டுமே ரஜினியிடம் உள்ளது. இதன்மதிப்பு ரூ.2.5 கோடி, ஆண்டுக்கு வருமான வரி 13 கோடி என இவரது சொத்துக்கள் மதிப்பிடப்பட்டுள்ளது. ரஜினி சென்னை போயஸ் தோட்ட வீட்டை 2002-ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.35 கோடியாகும். 

ரஜினிகாந்த் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதும் ரஜினிகாந்த் தான் நடித்த படம் சரியாக வசூலிக்கவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு குறிப்பிட்ட அளவிலான பணத்தினைத் திரும்பவும் அளிப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...