ஜனவரி 2
சித்தா மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த 105 மருத்துவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில், சித்தா மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த 105 மருத்துவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், இந்தியாவிலேயே தமிழக சுகாதாரத்துறை முதலிடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், தற்போது பணியாணை பெற்ற அனைத்து மருத்துவர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் வாழ்த்தினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சித்தா மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த 105 மருத்துவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில், சித்தா மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த 105 மருத்துவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், இந்தியாவிலேயே தமிழக சுகாதாரத்துறை முதலிடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், தற்போது பணியாணை பெற்ற அனைத்து மருத்துவர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் வாழ்த்தினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.