105 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்

ஜனவரி 2

சித்தா மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த 105 மருத்துவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில், சித்தா மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த 105 மருத்துவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், இந்தியாவிலேயே தமிழக சுகாதாரத்துறை முதலிடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், தற்போது பணியாணை பெற்ற அனைத்து மருத்துவர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் வாழ்த்தினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...