ஜெயலலிதா மரண விவகாரம் : தினகரன், கிருஷ்ணப்ரியாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன்


டிசம்பர் 27

ஜெயலலிதா மரணம் தொடர்பாக  எம்எல்ஏ தினகரன் மற்றும் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கு  நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகிப் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் வெளியிட்டார். இது குறித்து ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் புகார் கூறப்பட்டது. இது தொடர்பர்க விசாரணை ஆணையம் வெற்றிவேலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர் நேரில் ஆஜராகி, வீடியோ தொடர்பான ஆதாரங்களை அளிக்க வேண்டும் எனவும் அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், எம்எல்ஏ தினகரன் மற்றும் இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

அதில், தங்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்களை 7 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு 3 பேருக்கும் விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணப்ரியா வரும் ஜனவரி 2-ல் நேரில் ஆஜராகவும், 2016ல் போயஸ் கார்டனில் வேலை பார்த்தவர்கள் விவரம், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்குமாறு பூங்குன்றனுக்கும் சம்மனில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, அப்பல்லோ மருத்துவர்கள் சத்யபாமா ஜனவரி 2ம் தேதியும், சுதா சேய்யன் ஜனவரி 3ம் தேதியும் நேரில் ஆஜராகவும் விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...