ஜெயலலிதா மரண விவகாரம் : தினகரன், கிருஷ்ணப்ரியாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன்


டிசம்பர் 27

ஜெயலலிதா மரணம் தொடர்பாக  எம்எல்ஏ தினகரன் மற்றும் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கு  நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகிப் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் வெளியிட்டார். இது குறித்து ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் புகார் கூறப்பட்டது. இது தொடர்பர்க விசாரணை ஆணையம் வெற்றிவேலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர் நேரில் ஆஜராகி, வீடியோ தொடர்பான ஆதாரங்களை அளிக்க வேண்டும் எனவும் அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், எம்எல்ஏ தினகரன் மற்றும் இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

அதில், தங்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்களை 7 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு 3 பேருக்கும் விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணப்ரியா வரும் ஜனவரி 2-ல் நேரில் ஆஜராகவும், 2016ல் போயஸ் கார்டனில் வேலை பார்த்தவர்கள் விவரம், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்குமாறு பூங்குன்றனுக்கும் சம்மனில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, அப்பல்லோ மருத்துவர்கள் சத்யபாமா ஜனவரி 2ம் தேதியும், சுதா சேய்யன் ஜனவரி 3ம் தேதியும் நேரில் ஆஜராகவும் விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...