குல்பூஷன் ஜாதவின் குடும்பத்தினரை அவமரியாதையுடன் நடத்திய பாக்., - இந்தியா குற்றச்சாட்டு

டிசம்பர் 26

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷண் ஜாதவை, அவரது மனைவி, தாய் சந்திக்க சென்ற போது, அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த தாலி, நெற்றியில் வைத்திருந்த பொட்டை அகற்ற கட்டாயப்படுத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. 

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. அவரை தூதரக அதிகாரிகள் சந்திக்க மத்திய அரசு அனுமதி கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான், குல்பூஷண் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாய் சந்திக்க அனுமதிப்பதாக அறிவித்திருந்தது. அதன்படி, இந்தச் சந்திப்பு நேற்று நடந்தது.

இந்த சந்திப்பு முடிந்து நாடு திரும்பிய இருவரும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பு 3 மணி நேரம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் வெளியுறவு செயலர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், குல்பூஷண் ஜாதவை சந்திக்க சென்ற போது, அவரின் தாய் மற்றும் மனைவி தாலி, நெற்றியில் இருந்த பொட்டு ஆகியவை அதிகாரிகள் கட்டாயத்தின் அடிப்படையில் அகற்றப்பட்டன. இருவருக்கும் வேறு ஆடை கொடுத்து அணியக் கூறினர். சந்திப்பு முடிந்த பிறகு, ஜாதவ் மனைவி அணிந்த செருப்பு திருப்பித் தரப்படவில்லை. 

இந்த சந்திப்பின்பாது, ஜாதவ் நெருக்கடி மிகுந்த சூழ்நிலையில், ஏற்கனவே சொல்லி கொடுக்கப்பட்ட விஷயத்தையே கூறினார். அவரின் தோற்றமும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. விதிகளை மீறி ஜாதவ் குடும்பத்தினரை அந்நாட்டு பத்திரிகையாளர்கள் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு தொந்தரவு கொடுத்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...