குல்பூஷன் ஜாதவின் குடும்பத்தினரை அவமரியாதையுடன் நடத்திய பாக்., - இந்தியா குற்றச்சாட்டு

டிசம்பர் 26

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷண் ஜாதவை, அவரது மனைவி, தாய் சந்திக்க சென்ற போது, அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த தாலி, நெற்றியில் வைத்திருந்த பொட்டை அகற்ற கட்டாயப்படுத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. 

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. அவரை தூதரக அதிகாரிகள் சந்திக்க மத்திய அரசு அனுமதி கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான், குல்பூஷண் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாய் சந்திக்க அனுமதிப்பதாக அறிவித்திருந்தது. அதன்படி, இந்தச் சந்திப்பு நேற்று நடந்தது.

இந்த சந்திப்பு முடிந்து நாடு திரும்பிய இருவரும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பு 3 மணி நேரம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் வெளியுறவு செயலர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், குல்பூஷண் ஜாதவை சந்திக்க சென்ற போது, அவரின் தாய் மற்றும் மனைவி தாலி, நெற்றியில் இருந்த பொட்டு ஆகியவை அதிகாரிகள் கட்டாயத்தின் அடிப்படையில் அகற்றப்பட்டன. இருவருக்கும் வேறு ஆடை கொடுத்து அணியக் கூறினர். சந்திப்பு முடிந்த பிறகு, ஜாதவ் மனைவி அணிந்த செருப்பு திருப்பித் தரப்படவில்லை. 

இந்த சந்திப்பின்பாது, ஜாதவ் நெருக்கடி மிகுந்த சூழ்நிலையில், ஏற்கனவே சொல்லி கொடுக்கப்பட்ட விஷயத்தையே கூறினார். அவரின் தோற்றமும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. விதிகளை மீறி ஜாதவ் குடும்பத்தினரை அந்நாட்டு பத்திரிகையாளர்கள் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு தொந்தரவு கொடுத்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...